பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டல்.  - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 நவம்பர், 2023

பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டல். 

தக்கலை அருகே மணலிக்கரை புதூர் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி பிரின்ஸ் (வயது 32), பி.ஏ.பி.எட் பட்டதாரி. இவர் நாகர்கோவிலில் உள்ள கவரிங் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த கடைக்கு தக்கலை பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் அடிக்கடி வந்து சென்றார். 


இதையடுத்து ஸ்டான்லி பிரின்சுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் ஸ்டாலின் பிரின்ஸ், இளம் பெண்ணை ஒரு கோவிலிலுக்கு அழைத்து சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இருவரும் கருங்கல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 


திருமணம் முடிந்த சில நாட்களில் ஸ்டான்லி பிரின்சின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த இளம் பெண் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்டான்லி பிரின்ஸ் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போன் எண்ணிற்கு அனுப்பினார். தன்னுடன் குடும்ப நடத்தவரவில்லை என்றால் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டினார்.


இது குறித்து இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஸ்டான்லி பிரின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 28 வயது கல்லூரி பேராசிரியர் ஒருவரும் கவரிங் கடையில் நகை ஆர்டர் கொடுத்துள்ளார். அந்த நகை தான் அணிந்திருக்கும் நகை மாடலை போன்று இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தனது திருமண போட்டோவை ஸ்டான்லி பிரின்ஸ் வாட்ஸ்அப் எண்ணிற்கு பேராசிரியர் அனுப்பி உள்ளார்.


இந்த நிலையில் ஸ்டான்லி பிரின்ஸ் வாட்ஸ் அப் மூலம் பேராசிரியருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார். இதை கண்டித்ததால் ஆத்தி ரம் அடைந்த ஸ்டான்லி பிரின்ஸ், பேராசிரியர் போட்டோவை மார்பிங் செய்து அவரது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பினார். என்னிடம் பேசாவிட்டால் ஆபாச போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். யர் போட்டோவை மார்பிங் செய்து அவரது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பினார். என்னிடம் பேசாவிட்டால் ஆபாச போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். 


இது தொடர்பாக ஸ்டான்லி பிரின்ஸ் மீது பேராசிரியரும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் ஸ்டான்லி பிரின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஸ்டான்லி பிரின்சை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டான்லி பிரின்சிடம் போலீசார் விசாரணை மேற்கொ ண்டனர். ஸ்டான்லிபிரின்ஸ் வேறு ஏதாவது பெண்களுக்கு ஆபாச படங்களை சித்தரித்து சமூக வலைதளங்களில் அனுப்பி உள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். 


இதற்கிடையில் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டல் விடுத்தால் உடனடியாக போலீசில் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் தங்களது புகை ப்பட ங்களை அறிமுகம் இல்லாத நபர்களுக்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும். புகைப்படங்களை வைத்து ஆபாசமாக மார்பிங் செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/