ஆசியக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற பாக்கிஸ்தான், முதலில் பந்து வீச முடிவு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

ஆசியக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற பாக்கிஸ்தான், முதலில் பந்து வீச முடிவு.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்று ஆட்டம் துபாயில் தெடங்கியது, ஏற்கனவே குரூப் சுற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், தற்போது வெற்றிபெறும் முனைப்பில் பாக்கிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.


டாஸ் வென்ற பாக்கிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீசுவதாக தெரிவித்தார். ஆடுகளத்தில் இரவு நேரத்தில பனிப் பொழிவு இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்த பாபர் அசாம், கடந்த முறை இந்தியாவுடன் மோதிய போது பல நல்ல அம்சங்கள் தென்பட்டதாகவும், இன்றைய ஆட்டத்திலும் நேர்மறையான எண்ணங்களுடன் விளையாட உள்ளோம் என்று கூறினார், மேலும் தஹானி காயம் காரணமாக விலகியுள்ளதால் ஹஸ்னாயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாபர் அசாம் கூறினார். 

மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் பந்துவீச தான் நாங்களும் முடிவு செய்து இருந்தோம். தற்போது பேட்டிங் செய்ய உள்ளோம். இதனால் அதிரடியாக விளையாடி நல்ல இலக்கை முதலில் தீர்மானிக்க வேண்டும், பிளேயிங் லெவனை தேர்வு செய்வது உண்மையில் தலைவலியாக இருந்தது. இந்திய அணியின் இன்று 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியுள்ளார். தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று ரவி பிஸ்னாய் இன்றைய போட்டியில் விளையாடுகிறார் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/