சிவகங்கையில் "ஓரணியில் தமிழ்நாடு" பொதுக்கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் "ஓரணியில் தமிழ்நாடு" பொதுக்கூட்டம் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் திரு தென்னவன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார், மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திரு கணேசன், மாவட்ட கழக துணைச் செயலாளர் சேங்கை மாறன், கழக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் தமிழ் பிரியா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சிகளை கிளைக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக