சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

 


சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில். 100க்கு மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர்.


நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஷாலோம் சரிட்டபிள் டிரஸ்ட், ஆல் தி சில்ட்ரன், சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சமத்துவ சேவை குழு ஆகியன இணைந்து இன்று இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தின. முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன், நிசார், செவிலியர் விஜயலட்சுமி சமத்துவ சேவை குழு தலைவர் அன்பழகன், சமூக ஆர்வலர் இந்திரஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செல்வகுமார் முகாமினை துவக்கி வைத்தார்.  உதகை அரசு மருத்துவ கல்லூரி கண் மருத்துவ துறை தலைவர் மரு. சரண்யா அவர்கள் தலைமையில் மருத்துவர்கள் ஜெப்ரான், நித்திஷ் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். 40 பேருக்கு கண்புரை பாதிப்பு கண்டறியப்பட்டது. நோயாளிகள் விருப்பத்திற்கு உட்பட்டு கண்புரை அறுவை சிகிச்சைக்கு 20 பேர் உதகை மருத்துவ கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். 


5 பேர் கண் சதை வளர்ச்சி அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் ஆஷா பணியாளர்கள் ஆகியோர் மூலம் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு உள்ளிட்டவையும் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் சமத்துவ சேவை குழு நிர்வாகிகள் அன்பழகன், சந்திர சேகர். கிருஷ்ணமூர்த்தி, திருச்செல்வம், விவேக், சிவா, மார்கண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad