குடியாத்தம் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு
குடியாத்தம் ,அக் 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கொண்ட சமுத்திரம் கிராமத்தில் இன்று மதியம் 02.00 மணியளவில் மேற்படி கிராம சர்வே எண்.136/2-ல் அமைந்துள்ள குடியாத்தம் சார்பு நீதிமன்ற வளாகம் மற்றும் அதன் பின்புறம் அமைந்துள்ள ஏரியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுவது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
பின்னர் மதியம் 02.15 மணியளவில் குடியாத்தம் ஆர் எஸ் நகர் கொண்ட சமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர் கூட்டுறவு நியாய விலை கடையினை(04ED002PN) ஆய்வு மேற்கொண்டார். மேலும் மேற்படி கடையில் குடும்ப அட்டை வைத்துள்ள திரு.ரங்கநாதன் என்பவர் பொருட்கள் வாங்காமல் இருந்த நிலையில் மேற்படி நபரின் வீட்டை ஆய்வு மேற்கொண்டார். இதில் குடியாத்தம் வட்டாட்சியர், பழனி
குடியாத்தம் வட்டார வளர்ச்சி. அலுவலர் ஹேமலதா கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், தனலட்சுமி வட்ட வழங்கல். அலுவலர் திவ்யா பிரணவம்
பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் கோபி நகர நில அளவர், குறுவட்ட நில அளவர் வருவாய் ஆய்வாளர்கள் அசோக் குமார் செந்தில்
கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி
கிராம உதவியாளர் மணிகண்டன் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக