மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி தலைமையில் குறை தீர்வு கூட்டம் !
வேலூர் , டிச 3 -
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன், உத்தரவின் பேரில், பொதுமக்கள் குறைதீர்வு நாள் ஒவ் வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், நேரில் அளித்து குறைகளை கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி வாரத்திலுள்ள அனைத்து வேலை நாட்களிலும், பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொது மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. இன்று 03.12.2025-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி தலைமையில் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 10 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக