தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம். - 390 மனுக்கள் பெறப்பட்டன - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம். - 390 மனுக்கள் பெறப்பட்டன

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல கோரிக்கைகள் அடங்கிய 390 மனுக்கள் பெறப்பட்டன:ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேச்சு



தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பேசியதாவது:-


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாறுதல், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 390 மனுக்கள் பெறப்பட்டன.


பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரருக்கு உடனடியாக தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என பேசினார். பின்னர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட புனல்வாசல் அரசு பள்ளி மாணவியர் விடுதி, தஞ்சாவூர் அரசு கல்லூரி பெண்கள் விடுதி, தஞ்சாவூர் அரசு கல்லூரி பெண்கள் விடுதி இடைநிலை காவலர் மற்றும் பட்டதாரி காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.


கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதி திராவிடர் நல அலுவலர் லித்திரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகாதேவி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad