சமூக விரோதிகளால் சூறையாடப்பட்ட சிஎஸ்ஐ கிறிஸ்துவ ஆலயம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

சமூக விரோதிகளால் சூறையாடப்பட்ட சிஎஸ்ஐ கிறிஸ்துவ ஆலயம்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் மிஷின் ஸ்கூல் வீதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவர்களின் சிஎஸ்ஐ பேரா ஆலயத்தில் நேற்று இரவு சமூக விரோதிகளின் சதியால் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு சென்றுள்ளனர்.


தகவல் அறிந்து உடனடியாக மேல்விஷாரம் தி நேஷனல் வெல்பர் அசோசியேஷன் சார்பில் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனவே தீய செயலில் ஈடுபட்ட திருடர்களை உடனடியாக கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்குமாறு மேல்விஷாரம் நேஷனல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில்  காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.


இந்த காம்பவுண்டில் மீது மது பிரியர்கள் மது அருந்துவதாக புகார்கள் பொதுமக்களிடம் வருகின்றது, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் சார்பிலும் கோரிக்கை வைத்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/