தேனி மாவட்டம் பெரியகுளம் டாக்டர்.அம்பேத்கர் சிலை முன்பு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரியகுளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகாலட்சுமி காதலர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழப்பு, இன்றுடன் 8 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத பெரியகுளம் உட்கோட்ட காவல்துறையை கூண்டோடு மாற்றம் செய்யக் கோரி மறியல் போர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாரிமுத்து மகாலட்சுமி காதலர்கள் கடந்த 5.8.23 ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தனர். இதனை அடுத்து அன்றைய தினம் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. மகாலட்சுமியின் உடலை மட்டும் மருத்துவமனையில் இருந்து பெற்றுச் சென்று இறுதி சடங்கை செய்தனர் . மேலும் இறந்த மாரிமுத்துவின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்தும் மாரிமுத்துவின் இறப்பின் மீது சந்தேகம் இருப்பதாகவும் இதனை கொலை வழக்காக பதிவு செய்யக் கோரியும் ஜனநாயக முற்போக்கு இயக்கத்தை சார்ந்தவர்கள் கடந்த 5.8.23 ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இன்றுடன் 8 நாட்கள் ஆன நிலையில் இதுவரையிலும் மாரிமுத்துவின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வரும் நிலையில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இது குறித்து பல்வேறு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பெரியகுளம் அம்பேத்கர் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ரபீக் அவர்கள் தலைமையில் பெரியகுளம் நகரச் செயலாளர் ஜோதி முருகன், ஒன்றிய செயலாளர் ஆண்டி ஆகியோர் முன்னிலையில் மறியல் போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தேனி திண்டுக்கல் மண்டல செயலாளர் இரா.தமிழ்வாணன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றியுள்ளார். இதில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக