திருப்பூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டிமன்றம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

திருப்பூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டிமன்றம்.


முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டிமன்றம் திருப்பூர் வடக்கு மாவட்டம் தெற்கு மாநகர திமுக மற்றும் 51 வது வட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையோட்டி மதுரை முத்து நடுவராக பங்கேற்கும் சிறப்பு பட்டிமன்றம் திருப்பூர் ஆர். வி .இ. ஈ வே அவுட், காட்டுவளவு பகுதியில் 13-8- 2023 ஞாயிறு மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.


இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம் எல் ஏ, தொமுச மாநில துணைச் செயலாளரும், தெற்கு மாநகர திமுக செயலாளருமாகிய டி. கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமாகிய ந. தினேஷ் குமார், உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் மற்றும் மாநில மாவட்ட மாநகர, ஒன்றிய திமுக நிர்வாகிகளும் மகளிர் அணியினரும் கலந்து கொள்கின்றனர். இந்த சிறப்பு பட்டிமன்றத்திற்கு திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன் என தொமுச மாநில துணை செயலாளரும், தெற்கு மாநகர செயலாளருமாகிய டி. கே. டி. மு . நாகராசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/