திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் புரிசை எல்லையம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது, இதில், ரூ.4.34 லட்சம் வசூலானது. இப்பணியில், இந்து சமய அறநிலையத் துறை செய்யாறு ஆய்வா் ப.முத்துசாமி, செயல் அலுவலா் கு.ஹரிஹரன், எழுத்தா் கோ.ஜெகதீசன், வழக்குரைஞா் சிவக்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் பரந்தாமன், துணைத் தலைவா் ராமகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் காணிக்கை பணம் எண்ணப்பட்டது.
இதில், 4 லட்சத்து 34 ஆயிரத்து 221 ரூபாய் ரொக்கமும், 106 கிராம் தங்கம், 71 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். பின்னா், காணிக்கை பணத்தை இந்து சமய அறநிலைத் துறையினா் கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தினா்.
- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக