வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் இன்று (25.9.23) தலைமை கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக - பாஜக இடையே ஆன கூட்டணி முறிவு குறித்து அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து குடியாத்தம் நகர கழக செயலாளர் J.K.N.பழனி அவர்களின் தலைமையில் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா R.மூர்த்தி, ஒன்றிய கழகச் செயலாளர் T.சிவா, கழக நிர்வாகிகள் R.K.அன்பு, A.ரவிச்சந்திரன், M.பாஸ்கர், பூங்கொடி மூர்த்தி V.N.தனஞ்செயன், S.I.அன்வர் பாஷா, M.K.சலீம், S.L.S.வனராஜ், S.S.ரமேஷ் குமார், K.தக்ஷிணாமூர்த்தி, K.லாவண்யா குமரன், A.சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி செயலாளர்கள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக