தென்காசி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் - ராஜா எம்எல்ஏ தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 ஜனவரி, 2024

தென்காசி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் - ராஜா எம்எல்ஏ தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில். ஜன.31.


தென்காசி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடந்தது.


திமுக இளைஞர் அணி அமைப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தலைமை வகித்தார். இதில் முதன்மைச் செயலாளர் அமைச்சர் நேரு, கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/