சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மானாமதுரை முதல் மதுரை பேருந்து போக்குவரத்து மற்றும் மானாமதுரை முதல் சிறுகுடி கிராமத்திற்கான புதிய பேருந்து போக்குவரத்தை முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நகர் கழக செயளாலர் பொன்னுச்சாமி, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜாமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர் மன்ற துணை தலைவர் பாலசுந்தர், ஒன்றிய துணை பெருந்தலைவர் முத்துசாமி, நகர் கழக துணை செயலாளர் மன்னர் மன்னன், மாவட்ட மகளிர் அணி வளர்மதி, வார்டு செயலாளர்கள் ராஜேந்திரன் திருமுருகன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள் இந்துமதி, தேன்மொழி விஜயகுமார், சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம், கழக நிர்வாகிகள், ஆட்டோ சங்க தலைவர், பேருந்து நடத்துனர், போக்குவரத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக