அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செறிவூட் டல் திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் மைய பயிற்சி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செறிவூட் டல் திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் மைய பயிற்சி !

அரசு பள்ளி  ஆசிரியர்களுக்கு செறிவூட் டல் திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் மைய  பயிற்சி !
வேலூர் , பிப் 24 -
         வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையும் யுனிசெப் நிறு வனம், மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் குறித்த செறிவூட்டல் ( Science, Technology, Engineering, and Mathematics - STEM) திட்டத்தை செங்கல் பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளுர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடைமுறைபடுத்த படுகிறது.  
வேலூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட 50 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி  காட்பாடி காந்திநகரில் அமைந்துள்ள வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா அவர்கள் கணித, அறிவியல் உபகரண பெட்டிகளை வழங்கி பயிற்சியினை தொடக்கிவைத்து பேசினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முனைவர்.செ.நா. ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.   பயிற்சி  திட்ட மாநில ஒருங்கிணைப் பாளர் ஓய்வுபெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் அ.அரவிந்த் பயிற்சியின் நோக்கம் செயல்பாடுகள் குறித்து பேசினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் வெளியீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் ச.சுப்பிரமணி செய்முறை பயிற்சிகள் குறித்து விளக்க உரையாற்றினார்.  மாவட்டத் தலைவர் முத்து சிலுப்பன், வானவில் மன்றஇணை ஒருங்கிணைப்பாளர் க.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசி னார். பயிற்சி கருத்தாளர்கள் பி.ரவீந்தி ரன், அனிதா, மரியஜான், நிலவழகி, லித்தியம்,  அருண்குமார் காட்பாடி கிளை தலைவர் ஆர்.சுதாகர் இணை ஒருங்கி ணைப்பாளர் கே விஸ்வநாதன் பி சுகு மாரன்  ஆகியோர் பயிற்சிகளை ஒருங்கி ணைக்கின்றனர்.வேலூர் மாவட்டத்திலி ருந்து 75 அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். 
தமிழ்நாடு அரசின் புதுமையான திட்ட மாக ஆசிரியர்களுக்கு செறிவூட்டல் திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் மைய ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அளவில் வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளுர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல் பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் 500 ஆசிரி யர்கள் தேர்தெடுக்கப்பட்டு கணித, அறிவியல் உபகரண பெட்டிகள் வழங்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் எளிமையான முறையில் கணிதமும் அறிவியல் கற்கும் திறன் மேம்படும் என மாநில ஒருங்கிணைப்பாளர் அ.அரவிந்த் கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad