தொடர் வெற்றி பதிவாகுமா? சென்னை அணி இன்று பெங்களூரு அணியுடன் மோதல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 மே, 2022

தொடர் வெற்றி பதிவாகுமா? சென்னை அணி இன்று பெங்களூரு அணியுடன் மோதல்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதம் போட்டி புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில்  விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டது, புள்ளிகல் தரவரிசை பட்டியலில் 9-ம் இடத்தில் உள்ள நிலையில் இனி சென்னை அணி அடுத்து நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிது கட்டாயம். 


அதேபோல் இன்று நடைபெறும் பெங்களூருக்கு எதிரான போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிப்பட்டியலில் அடுத்த இடத்திற்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளது. கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடியது, இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.  இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்தது. இதையடுத்து சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/