பாமாயில் டேங்கர் லாரி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

பாமாயில் டேங்கர் லாரி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செம்பியன் மாதேவி கிராமத்தில் உள்ள ஏரியில்  பாமாயில் டேங்கர் லாரி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்கள் உடன் உயிர் தப்பினார்.

டேங்கர் லாரியில் இருந்த பாமாயிலை பொதுமக்கள்  பிடித்துச் சென்றனர் மேலும் எண்ணையை பொதுமக்கள் பிடிக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், பாமாயில் நிறுவன ஊழியர்கள் பாமாயிலை மாற்று வாகனத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் பார்த்திபன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/