7 வெற்றி கோப்பைகளையும், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்று தமிழக கயிறு இழுக்கும் வீரர் வீராங்கனைகள் புதிய சாதனை.
கரூர் மாவட்டம் விஜய் வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மகாராஷ்ர மாநிலம் பால்கர் மாவட்டம் சின்சானி என்ற இடத்தில் தேசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்கள்.
இப்போட்டிகளை அகில இந்திய கயறு இழுக்கும் கூட்டமைப்பு சிறப்பாக நடத்தியது. இதில் தமிழ்நாடு உட்பட 20 மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் அணி பெண்கள் அணி கலப்புஅணி என 70 அணிகள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற தமிழக அணியினர் சிறப்பாக விளையாடி 7 வெற்றி கோப்பைகளையும், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். கரூர் மாவட்டம் விஜய் வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் 13 மற்றும் 15 வயதிற்குட்பட்டோர் போட்டியில் பங்கேற்று வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவர்களை பள்ளி முதல்வர்/தாளாளர் என்.மேகநாதன், பள்ளி செயலாளர் எம்.தமிழ்ச்செல்வி, துணை முதல்வர் ஏ.செல்வ லட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் டி.வடிவேல், யோகா ஆசிரியர் வி.மேனகா மற்றும் இருபால் ஆசிரியர், மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக