கேதார்நாத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், மோசமான வானிலையால், கீழே விழுந்து நொறுங்கியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர்கள் என உத்ன்தராகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் இரங்கல்.
கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உயிரிழந்த சென்னையை சேர்ந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இரு மாநில அரசுகளும் இணைந்து மேற்கொண்டு வருகிறது என தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக சென்னை செய்தியாளர் B. வேந்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக