எழுதி வைத்த சொத்துக்களை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உண்டு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 அக்டோபர், 2022

எழுதி வைத்த சொத்துக்களை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உண்டு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

எழுதி வைத்த சொத்துக்களை  ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உண்டு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு. சமுதாயம் தனது பொதுப் பண்புகளை வேகமாக இழந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை.


சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தனர். ஆனால், வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும், மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால், சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.


வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து பெற்றோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா விசாரித்தார்.  நகைகளை விற்றும், சேமிப்புகளை கரைத்தும், தங்கள் மருத்துவ செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய மகன்களின் செயல்பாடு, இதயமற்றது என விமர்சித்த நீதிபதி, கடந்த 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, பெற்றோர்களை கவனிக்காத குழந்தைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக உத்தரவிட்டுள்ளார்.


மேலும், தந்தை மகற்காற்றும் உதவி... என்ற திருக்குறளை மேற்கோள்காட்டிய நீதிபதி, சமுதாயத்தின் பொது பண்புகளை  இந்த குறள் எதிரொலிப்பதாகவும், தற்போது  சமூகம் இந்த விழுமியத்தின் முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/