கர்நாடகாவின் பெங்களூரு நகரில் தயானந்த சாகர் என்ற பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி கேண்டீனில் சக மாணவ மாணவிகள் சூழந்திருக்க, இரு மாணவிகள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதில் ஒரு மாணவி பேசி கொண்டிருக்கும்போதே, திடீரென மற்றொரு மாணவியின் கன்னத்தில் அடித்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த, அடி வாங்கிய மாணவி பதிலுக்கு பல முறை அந்த மாணவியை அடிக்கிறார்.
இந்த சம்பவம் நடந்தபோது, உடனிருந்த மாணவிகள் அதனை தடுக்க முன்வராமல், சண்டையை தூண்டி விடும் வகையில் ஒன்றாக கோஷம் எழுப்பியுள்ளனர்.
எனினும், இந்த மோதலுக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவரவில்லை.
பெங்களூருவில் மாணவிகள் மோதல் வீடியோ வைரலாகி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக