கேரள நரபலி விவகாரம்: உடலை சாப்பிட்டதாகக் கூறுவதை மறுக்கும் குற்றவாளிகள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 அக்டோபர், 2022

கேரள நரபலி விவகாரம்: உடலை சாப்பிட்டதாகக் கூறுவதை மறுக்கும் குற்றவாளிகள்


கேரளத்தில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் நரபலி கொடுக்கப்பட்டவர்களை சாப்பிட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளனர்.

குற்றவாளிகளான லைலா மற்றும் அவரது கணவர் பகவல் சிங் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, லைலா நாங்கள் நரபலி கொடுத்தவர்களை சாப்பிடவில்லை எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள மூவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, காவல் துறை தரப்பில் கொடுக்கப்பட்ட தகவலின்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்தத் தம்பதி நரபலி கொடுக்கப்பட்டவர்களை சாப்பிட்டதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டினை குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லைலா மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/