தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் தமிழக ஆளுநர் அவர்களுக்கு கடிதம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 ஜனவரி, 2023

தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் தமிழக ஆளுநர் அவர்களுக்கு கடிதம்.


ராணிப்பேட்டை மாவட்டம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் தமிழக ஆளுநர் அவர்களுக்கு தபால் மூலமாக கடிதங்கள் அனுப்பப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்று தமிழக ஆளுநர் சி ஆர் என் ரவி அவர்கள் கூறியிருந்தார்கள்.


பேரறிஞர் அண்ணா எனது மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைக்கவும் என்று அவர்கள் ஆளுநரின் இந்த கருத்துக்கு எதிராக நம் மாநிலத்தை சத்தமாகவும் தெளிவாகவும் தமிழ்நாடு என்று சொல்வோம் என்று தபால் மூலமாக வாழ்க தமிழ்நாடு வாழ்க இந்தியா என்ற ஹேஷ்டேக்குகள்  ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமையில் அசோசியேஷன் நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்க தமிழ்நாடு வாழ்க இந்தியா என்ற கடிதத்தை தபால் அலுவலகத்திற்கு சென்று தமிழக ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


- வாலாஜா தாலுகா செய்தியாளர் எ. நிஹால் அஹமத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/