புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட கோவில்களுக்கு மதிப்பீட்டு மானிய தொகை பெற்று தந்த சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 ஜூலை, 2023

புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட கோவில்களுக்கு மதிப்பீட்டு மானிய தொகை பெற்று தந்த சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி.


புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 2 பகுதியை சார்ந்த முஸ்லிம் கல்லறை வீதியில் அமைந்துள்ளது ஶ்ரீ வேதவல்லி மாரியம்மன் கோயில் கட்டுமான பணிக்காக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு தொகை இந்து அறநிலையத்துறை மூலம் பெற்று தருவது சம்பந்தமாக உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடியிடம்  ஊர் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி கோரிக்கை வைத்தனர்.

 பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் அறநிலையத் துறை ஆணையரிடம் மானியத்தொகை கிடைப்பதற்ங பரிந்துரை செய்தார். மேலும் நேதாஜி நகர் 1 அசோகன் வீதியில் உள்ள பாலமுருகன் தேவஸ்தானத்திற்கும் மானிய தொகைக்கு பரிந்துரை செய்திருந்தார்.


அதன் தொடர்ச்சியாக அறநிலையத்துறையின் மூலம்  முதலமைச்சரிடம்  இன்று சட்டமன்ற உறுப்பினரிடம் வேதவல்லி கோயிலுகான காசோலை 1,75,000 ரூபாய்,  அருள்மிகு பாலமுருகன் தேவஸ்தானம் 1,75,000 ரூபாய் மொத்தம் 3,50,000 ரூபாய்கான காசோளையை திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடியிடம் வழங்கினார்.


காசோலையை கோயில் நிர்வாகிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் மகிழ்ச்சியுடன் வழங்கினார். ஊர் பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினருக்கு சால்வை அணிவித்து நன்றிகளை தெரிவித்தனர். உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, திமுக பிரமுகர் நோயல், கிளை செயலாளர்கள் செல்வம், சேகர், ஆறுமுகம் மற்றும் ராகேஷ், கூட்டணி கட்சி சகோதரர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad