திருமங்கலம் அருகே ஆபத்தை விளைவிக்கும் ஆழ்துளை கிணறு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கரடிக்கல் கிராமத்தில் பொதுமக்களுக்காக குடிநீர் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஆழ்துளை கிணறு போடப்பட்டது. அந்த கிணற்றில் தண்ணீர் வராததால் அதனை மூடாமல் அப்படியே விட்டு சென்றார்கள் இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல முறை ஊர் தலைவர் இடமும் அதிகாரிகளிடமும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பகுதியில் விளையாடும் குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதனை மாவட்ட நிர்வாகமும் ஒன்றிய நிர்வாகம் உடனடியாக ஆழ்துளை கிணற்றை மூடி சிறுவர்களின் உயிர் பலி ஏற்படாமல் தடுக்குமாறு கிராம பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை முன் வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக