மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் தேரடி வீதிகளில் சிறப்பாக இன்று நடைபெற்றது, கள்ளழகர், ஸ்ரீதேவி, பூதேவி தயாருடன் தேரில் பவனி வந்தார்.
பல்லாயிரகணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.
அழகர் கோவிலில் ஆடி தைராயத்தை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு இன்று காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு கிராமங்களில் வந்து பெருமாளை தரிசித்தனர் அழகர் கோவிலில் ஆடி திருவிழா முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேர்வு படம் பிடித்து இழுத்தனர் விழாவை ஒட்டி அழகோவில் பகுதிகளில் படத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மு ராமசாமி மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர் அவர்களுக்கு தேரோட்டத்தை முன்னிட்டு மதுரை பெரியார் நிலையம் மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக