திருவண்ணாமலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு.


தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 25-8-23 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாநில முழுவதும் விரிவாக்கம் செய்து,திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், கொளக்குடி ஊராட்சி, அம்மன் நகரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்து, மாணவ மாணவிகளுக்கு உணவினை பரிமாறி மாணவிக்கு உணவை ஊட்டி விட்டார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.                


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/