புதுச்சேரி: ப-வடிவிலான வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

புதுச்சேரி: ப-வடிவிலான வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட சின்ன கடை சின்னமணி கூண்டில் இருந்து புனித இருதய ஆண்டவர் தேவாலயம் வரையிலான மகாத்மா காந்தி சாலைகளில் இருபுறமும் ப-வடிவ வாய்க்கால் உள்ளது, இச்சாலையில் அதிகப்படியான கடைகள் உள்ளன அன்றாடம் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் பயணம் மேற்கொள்கின்றனர்.



இப்பகுதிகளில் வாய்க்கால்களை தூர்வாராமல் அனைவரும் முகம் சுளிக்கும் வகையில் துர்நாற்றம் வீசிக்கொண்டும், அத்துடன் சுப்பையா சாலை, டாக்டர் அம்பேத்கர் சாலை, ஒத்தை வாடை வீதியில் அடைப்புகள் ஏற்பட்டு சாலைகளில் வாய்க்கால் நீர் தேங்கி நிற்கும் அவலம் உள்ளது. இதுபோன்று நிலை இருப்பதினால் உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்து அடிக்கடி சுத்தம் செய்யும் பணியை அதிகாரிகளை வைத்து மேற்கொண்டு வருகிறார். 


சிறிதளவு சுத்தம் செய்துவிட்டு மீண்டும் தொடர்ச்சியாக பிரச்சனை நீடித்துக் கொண்டு வருவதால்  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உமாபதி   அலுவலகம் சென்று அதிகாரிகளை சந்தித்து பேசினார், விரைந்து அங்குள்ள கழிவுகளை முழுமையாக அகற்றி சுத்தம் செய்து கொடுங்கள் என்று அதிகாரிகளை சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார். அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை ஏற்று விரைந்து பணிகளை மேற்கொள்ள உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவரிடம் உறுதி அளித்தனர். 


அதனைத் தொடர்ந்து தற்போது தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது அதனை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தனது கழக சகோதரர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ஆரோக்கியராஜ்,மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் செல்வம், ராகேஷ் மற்றும் மோரிஸ் ஆகியோர் உடன் இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/