கொடநாடு கொலை கொள்ளை வழக்கிற்கு துரித நடவடிக்கை வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

கொடநாடு கொலை கொள்ளை வழக்கிற்கு துரித நடவடிக்கை வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியினரின் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் ஓய்வு எடுப்பதற்காக கொடநாட்டில் சொந்த பங்களா வாங்கி இருந்து வந்த நிலையில் அவர் மறைந்த பிறகு அரசு பாதுகாப்புடன் இருந்து வந்தது, ஆனால் அவர் மறைந்த சில மாதங்களிலேயே அந்த பங்களாவை பாதுகாத்த பாதுகாவலர்களை கொலை செய்துவிட்டு கொள்ளையர்கள் பணம் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என்று அவருடைய சொந்த பொருட்களை எடுத்து சென்றுள்ளதாக தெரிவித்து வந்த நிலையில் இதை கண்டுபிடிக்க தனி ஆணையும் அமைத்து உண்மை தெரிய வேண்டும் என்று பொதுமக்கள் காத்திருந்து வந்த நிலையில் அப்போது இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு உத்தரவிட்டதும் இதனால் வரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்த நிலையிலும் வழக்கை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று  ஓ பன்னீர்செல்வம் கட்டளையின்படி தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இன்று ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் வி கோவிந்தராஜ் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒன்றிய குழு தலைவர்களும், ஒன்றிய செயலாளர்களும் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை  சிறப்பாகா நடத்தினர். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் அணியினருக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி தொண்டர்களும் பங்குபெற்றனர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/