விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கொடநாடு பங்களா குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வலியுறுத்தி, ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.க வினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை, மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கு காரணமான குற்றவாளிகள் மீது துரித நடவடிக்கை எடுத்து, தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒ.பி.எஸ் ஆதரவாளர் ஏழுமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமமுக கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக