தாராபுரம் அருகே உள்ள அக்கரை பாளையத்தில் தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்..! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

தாராபுரம் அருகே உள்ள அக்கரை பாளையத்தில் தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்..!

 


தாராபுரம் அருகே உள்ள அக்கரை பாளையத்தில் தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்..!



தாராபுரம் - திருப்பூர் மாவட்டம் அக்கரை பாளையத்தில் கிராமத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் தென்னை விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு செல்லும் வகையில், விவசாயிகள் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில், தென்னை வியாபாரிகளுக்கு உரிய விலை கேட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் தென்னை விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு செல்லும் வகையில், விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர்..


இந்நிகழ்வில் தாராபுரம் வட்டார தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.  ஏர்முனை இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் தனபால் முன்னிலை வைத்தார்.முக்கிய கோரிக்கைகளாக ரேஷன் கடைகளில் இறக்குமதி செய்து விற்கப்படும் பாமாயிலுக்கு மாற்றாக ஆகச்சிறந்த சத்துக்கள் நிறைந்த தேங்காய் எண்ணையை மானிய விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.


இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத கள்ளுக்கான தடை கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வருகிறது. கள்ளுக்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும் .எந்தவித நிபந்தனையும் இன்றி கொப்பரை தேங்காய் விலையை ரூபாய் 150 ஆக நிர்ணயிக்க வேண்டும். தேங்காய் எண்ணெயை சத்துணவு திட்டத்தில் சேர்க்க வேண்டும். போன்ற கோரிக்கைகள் வைத்து கோரிக்கை கோசம் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம்மாநில அவைத் தலைவர் ND பாலசுப்பிரமணியம் மாநிலத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன்.காங்கேயம் வட்டாரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி.குண்டடம்  வட்டாரத் தலைவர் சுரேஷ்.  ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி. தாராபுரம் வட்டார நிர்வாகிகள் ஜீவானந்தம், இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அரசு தென்னை விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் செப்டம்பர் மாதத்தில் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தை தமிழகமெங்கும் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி நடத்தப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.என்று திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் பேசினார்.. மேலும் இந்த தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/