திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெறும். அதே போல இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் மிகவும் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு மாட்டு வண்டிகள் மூலம் மேளத்தாளத்துடன் இளைஞர்கள் நடனமாடி செங்கத்தின் முக்கிய தெருக்களின் வழியே விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் வெகு சிறப்பாகக் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் ட்ரோன் கேமராக்களை பறக்க விட்டு ஊர்வலத்தில் வருவோர் களை போலீசார் கண்காணித்தனர். மேலும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஊர்வலம் நடைபெற்றத்தற்கு விழாக்குழுவினரும் , ஜமாத் கமிட்டியினரும் கைக்குலுக்கி நன்றி தெரிவித்தனர்.
செங்கம் செய்தியாளர் கலையரசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக