நாடார்கள் 80 சதவீதம் இருக்கக்கூடிய கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் சமுதாய சார்ந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்காமல் மாற்று சமுதாயத்திற்கு பதவி கொடுத்து உள்ளது முற்றிலும் தவறு.
நாடார்கள் 50 சதவீதத்திற்கு மேலாக உள்ள திருநெல்வேலி, திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் பதவிகளை நாடார்களுக்கு கொடுக்காமல் மாற்று சமுதாயத்திற்கு கொடுத்து உள்ளது முற்றிலும் தவறு. பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்திற்கு வருகை தந்து மரியாதை செலுத்திய முதல்வர் நீங்கள் என்பதாலும் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், சிலம்பு செல்வர் ம.பொ.சி.பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவித்தது தங்களது அரசு என்பதாலும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து திருச்செந்தூரில் மணி மண்டபம் கட்டியது தமிழ்நாடு நாடார் சங்கம் நடத்திய சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் தாங்கள் வருகை தந்து ரேஷன் கடையில் கருப்பட்டியை உடனடியாக வாங்குவோம் என்று அறிவித்தது என பல காரணங்களுக்காக உங்கள் மீது நாடார்களுக்கு மரியாதை உண்டு என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 10 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றியை உறுதிப்படுத்தும் சமுதாயம் நாங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.சமூக நீதி அடிப்படையில் நாடார்ளுக்கு உரிய மரியாதை வழங்காத எந்த அரசியல் கட்சிகளுக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம். நாடார் வாக்குகள் இலவசமல்ல என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் வழியில் உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பதவி, திருநெல்வேலி மாநகரம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிகளை நாடார்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம், என தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேசுநாடார் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக