முதல் அமைச்சரின் முகவரி துறையின் மூலம் அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்து பொது மக்களிடம் செல்போன் மூலம் விசாரித்த கலெக்டர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 செப்டம்பர், 2023

முதல் அமைச்சரின் முகவரி துறையின் மூலம் அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்து பொது மக்களிடம் செல்போன் மூலம் விசாரித்த கலெக்டர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் ஒருங்கிணைந்த முதல் அமைச்சரின் முகவரி இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.மனுக்கள் அனைத்தும் முறையாக தீர்வு செய்யப்படுகிறதா என்பதனை உறுதி செய்வதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தர கண்காணிப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்த மையத்தின் பணியாளர்கள் மனுதாரர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் அளித்த மனுக்கள் உண்மையில் தீர்வு செய்யப்பட்டதா என்பதையும்,பதில் கடிதம் வாயிலாக பெறப்பட்டதா என்பதையும் தொடர்ந்து உறுதி செய்கின்றனர்.விசாரணையின் போது முறையாக தீர்வு செய்யப்படாத மனுக்கள் மீண்டும் தொடர்புடைய் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 7 நாட்களுக்குள் தீர்வு காண அறிவுறுத்தப்படுகிறது.                                       


தொடர்ந்து குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் முதலமைச்சரின் முகவரி வாயிலாக தீர்வு செய்யப்பட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்த பொது மக்களிடம் செல்போன் மூலமாக நேரடியாக தொடர்பு கொண்டு முதவமைச்சரின் முகவரி இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளவாறு உண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதனையும், பதில்கள் கடிதங்கள் வாயிலாக பெறப்பட்டதா என்பதனையும் கலெக்டர் உறுதி செய்தார். 


இது குறித்து கலெக்டர் கூறுகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு,மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான அலுவலர்களாலும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. முதல் அமைச்சரின் முகவரி வாயிலாக பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களும் விரைவாகவும் அதே சயயத்தில் தரமான முறையிலும் தீர்வு செய்வதை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/