செங்கம் அருகே நடந்த கார் விபத்தில் 7 பேர் பலி. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் தமிழக முதல்வர் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

செங்கம் அருகே நடந்த கார் விபத்தில் 7 பேர் பலி. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் தமிழக முதல்வர் அறிவிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கார் ஒன்றில் மகாளய அமாவாசை முன்னிட்டு மேல் மலையனூர் கோவிலுக்கு  சென்றுவிட்டு கர்நாடகத்துக்கு காரில் திரும்பினர். அப்போது இவர்கள் சென்ற கார் செங்கம் அருகே திருவண்ணாமலை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஊத்தங்கரையில் இருந்து எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 


இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு.இதில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். 


இதனிடையே செங்கம் அருகே நிகழ்ந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு தலா ரூபாய் 2 லட்சம் நிவாரணமும் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


- செங்கம் செய்தியாளர் கலையரசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/