தென்காசி மாவட்டம், செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வைத்து செங்கோட்டை வழக்கறிஞா்கள் சங்கம் சார்பில் நீதிமன்றங்களில் இ-பைலிங்க் முறை அமல்படுத்துவதனை ஆட்சேபனை செய்வதோடு அத்தகைய நடைமுறையினை முழுமையாக கைவிடக்கோரி ஜேஏஏசி கேட்டுக்கொண்டவாறு வழக்கறிஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆ.வெங்கடேசன் தலைமையில் சங்க செயலாளர் .அருண், பொருளாளர் மூர்த்தி, துணைத் தலைவர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, சங்க முன்னாள் செயலாளர் ஆதிபாலசுப்பிரமணியன் வழக்கறிஞர்கள் மாரிமுத்து, சுடர்முத்தையா, நல்லையா, சுப்பிரமணியன், கணேசன், புளியரை வெங்கடேஷ், கரிசல் அருண், முத்து, ஆசாத், சிராஜ், தங்கராஜ், சிதம்பரம், ராஜாராம், சத்தியசங்கர், வீரபாண்டியன், சண்முககுமார் மாரிக்குட்டி, அபு அண்ணாவி பெண் வழக்கறிஞர்கள் கலிலா, இசக்கி இந்திரா மற்றும் குமாஸ்தா வண்டிமுத்து, வேலுமணி, சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறித்தி கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக