தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு நல் ஆளுமை விருதினை ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் நடைபெற்ற. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்.ரெஜினிக்கு நல் ஆளுமை விருதினை வழங்கி பாராட்டினார்.
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக