செங்கம் அருகே கிராம சபா கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை தாக்கியதால் பெரும் பரபரப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 அக்டோபர், 2023

செங்கம் அருகே கிராம சபா கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை தாக்கியதால் பெரும் பரபரப்பு.

 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது பெண் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது முன் விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோபி என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் ஒரு பெண் என பார்க்காமல் தகாத வார்த்தைகளால் சரமாரியாக திட்டியுள்ளார்.


இதனை கேட்க வந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மூர்த்தி என்பவரை பேசி கொண்டு இருந்த போதே தலையில் இரும்பு கம்பியால் தாக்கினார் ‌.பின்னர் அவர் ரத்த காயங்களுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார். அப்போது போலீசார் அவரை ஆட்டோ மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


- செங்கம் செய்தியாளர் கலையரசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/