சேத்தியாதோப்பு அருகேகரிவெட்டியில் என்எல்சிக்கு நிலம் மனைகள் அளவிடும் பணி துவக்கம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 நவம்பர், 2023

சேத்தியாதோப்பு அருகேகரிவெட்டியில் என்எல்சிக்கு நிலம் மனைகள் அளவிடும் பணி துவக்கம்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கரிவெட்டி கிராமத்தில் என் எல் சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் மனைகள் அளவீடு செய்ய அதிகாரிகள் வருகிறார்கள் என்ற தகவல் பரவியதையடுத்து கிராமத்தில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டனர்.  என்எல்சி அதிகாரிகள் வருவாய்த் துறையினர் நிலம் மனைகளை அளவீடு செய்ய வருகை தந்தனர். 


இப்பகுதி மக்கள் தொடர்ந்து சமகால இழப்பீடு, நிரந்தர வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராடிவந்தநிலையில் தற்போது என்எல்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் அளவீடு செய்ய கரிவெட்டி கிராமத்தில் பத்துக்கு மேற்பட்ட குழுக்களாக பிரிந்து போலீசார் பாதுகாப்புடன் ஒவ்வொரு வீடாக சென்று ஆவணங்களில் உள்ள அளவீடு  இருக்கிறதா என அளவீடு செய்து வருகின்றனர். இதனிடையே கிராமத்தில் பலர் தங்கள் வீடுகளையோ மனைகளையோ அளவீடு செய்ய வேண்டாம் என மறுத்தனர். 


அப்போது அங்கு வந்த போலீசார் அளவீடு செய்ப அனுமதிப்பவர் இடங்களை மட்டும் அளவீடு செய்யுங்கள். அனுமதி மறுத்தவர்களை விட்டு விடுங்கள் என கூறி மறுப்பவர்கள் வீடுகளையும் மனைகளையும் அளவீடு செய்யாமல் அனுமதிப்பவர்களின் இடங்களில் அளவீடுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/