தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற தாமிரபரணி ஆற்றில் நாட்டு இன கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் நிகழ்ச்சியில், தூத்துக்குடி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, ஆகியோர் முன்னிலையில் ஆற்றில் கெண்டை மீன் குஞ்சுகளை விட்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி உமரிசங்கர், இணை இயக்குநர் (மீன்வளம்-மீனவர் நலத்துறை) அமல் சேவியர், கருங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கோமதி ராஜேந்திரன், திருவைகுண்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் பா.சினேக வள்ளி, ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மன்றத் தலைவர் சாரதா பொன் இசக்கி, உதவி இயக்குநர் (மீன்வளம்-மீனவர் நலத்துறை) விஜயராகவன், திருவைகுண்டம் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக