கலால் வரி உயர்வினால் பிப்ரவரி 01 முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 ஜனவரி, 2024

கலால் வரி உயர்வினால் பிப்ரவரி 01 முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது.

சென்னை, ஜன.29, 01.02.2024 முதல் மதுபானங்களின் விலை உயர்வு


மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. 



எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது. 



மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. .10/-



மேற்கண்ட உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி.,  1000 மி.லி., கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி., 500 மி.லி., கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/