வாங்கல் ரயில் நிலையம் நேற்று ஜனவரி 25 முதல் நிரந்தரமாக மூடப்பட்டது :
கரூர் மாவட்டம் வாங்கல் ரயில் நிலையம் நேற்று ஜனவரி 25 முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.சேலம்to கரூர் அகல ரயில் பாதை திட்டம் 2013ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட போது அப்போது வாங்கல் ரயில்வே ஜங்ஷன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையில் அந்த ஜங்ஷனுக்கு போதிய பயணிகள் யாரும் சரிவர வராத காரணத்தினாலும் மேலும் வருவாய் இன்றி ஜங்ஷன் இயங்கி வந்த நிலையில் நேற்று ஜனவரி 25 முதல் நிரந்தரமாக ஜங்ஷன் மூடப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது இனி இந்த வாங்கல் ஜங்ஷனில் எந்த ஒரு ரயிலும் நிற்காது எனவும், பயணிகள் யாரும் இந்த ஜங்ஷனுக்கு வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக