தெர்மல்நகர் - கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஜனவரி, 2024

தெர்மல்நகர் - கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.

தூத்துக்குடி மாவட்டம், ஜன.11, தூத்துக்குடி தெர்மல்நகர் பகுதியில் நடந்த கொலை  வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 3 பேர்  இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி நடவடிக்கை.




கடந்த 11.12.2023 அன்று தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லேபர்காலனி to முத்தையாபுரம் சாலையில் பகுதியில் வந்து கொண்டிருந்த தெர்மல்நகர் லேபர்காலனியைச் சேர்ந்த ஜோசப் மகன் ஜெகன்ராஜ் (32) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில், தெர்மல்நகர் லேபர்காலனியைச் சேர்ந்தவர்களான பேச்சிமுத்து மகன் சக்தி (எ) பறவை (எ) இசக்கிசக்தி (27), இருளாண்டி மகன் நவநீதன் (எ) நவநீதகிருஷ்ணன் (30) மற்றும் கூரியாபிள்ளை மகன் செல்வம் (23) ஆகிய 3 பேரையும் தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.




மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான சக்தி (எ) பறவை (எ) இசக்கிசக்தி, நவநீதன் (எ) நவநீதகிருஷ்ணன் மற்றும் செல்வம் ஆகிய 3 எதிரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.




மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.




அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெர்மல்நகர் லேபர்காலனியைச் சேர்ந்தவர்களான பேச்சிமுத்து மகன் 1) சக்தி (எ) பறவை (எ) இசக்கிசக்தி , இருளாண்டி மகன் 2) நவநீதன் (எ) நவநீதகிருஷ்ணன் மற்றும் கூரியாபிள்ளை மகன் 3) செல்வம் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்தியசிறையில் அடைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad