செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வேடசந்தூர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்* - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 ஜனவரி, 2024

செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வேடசந்தூர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்*

செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வேடசந்தூர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்



வியாழக்கிழமை.... மாலை ஐந்து முப்பது மணி அளவில்....



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு சமூகவிரோதிகளின் கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆத்துமேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். செய்தியாளர் இளங்கோ கண்டன உரை ஆற்றினார். 15 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்கச் செயலாளர் சிமித்இயேசுராஜா நன்றி உரை ஆற்றினார். வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், ஏட்டையா அந்தோணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக குரல்மாட்ட ஒளிப்பதிவாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/