அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம். இது ஆலயத்தில் அம்மாவாசை அன்று சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம். தை மஹாளய மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சன்டி யாகம் நடைபெற்றது.
யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் பக்தர்களின் வேண்டுதலின் பேரில் யாகத்தில் போடப்பட்டன. பின்னர் பல்வேறு வகையான மூலிகைகள் மற்றும் பழங்கள் யாகத்தில் இடப்பட்டன. பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டங்களில் இருந்த புனித நீரானது பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
யாகத்தில் பெரம்பலூர் சென்னை கன்னியாகுமரி மதுரை கோயம்புத்தூர் திருச்சி கடலூர் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபாராதனைக்கு பின்பு அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடப்பட்டது கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- அரியலூர் மாவட்டம் செய்தியாளர் வேல்முருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக