100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: லாரியை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன் இயக்கியுள்ளார். அவருடன் உதவியாளராக பெருமாள் என்பவர் இருந்துள்ளார். இவர்களின் வாகனம் இன்று அதிகாலை 12:35 மணியளவில் புளியரை எஸ்.வளைவு பகுதியில் வந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்த லாரி, 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து எஸ்.வளைவு இரயில் தண்டவாளத்தில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
டார்ச் லைட் கொண்டு நிறுத்தப்பட இரயில்: அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் வயோதிக தம்பதி சண்முகம், வடக்கத்தி அம்மாள் மற்றும் தோட்டத்தின் காவலாளி சுப்பிரமணி ஆகியோர் விபத்து சத்தம் கேட்டு எழுந்துள்ளனர். அச்சமயம், செங்கோட்டையில் இருந்து கேரளா நோக்கி பயணிக்கும் இரயில் வரும் சத்தம் கேட்கவே, அதிர்ந்துபோன அவர்கள் டார்ச் லைட் எடுத்துச்சென்று விரைந்து இரயிலை நடுவழியில் நிறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக