துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் கொண்டாட்டம் - நடிகர்கள் பங்கேற்பு
துபாய் , ஐக்கிய அரபு அமீரகத் துபாய் அல் நாதா பகுதியில் உள்ள துபாய் ஸ்காலர்ஸ் பிரைவேட் பள்ளியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி டாக்டர் ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான பொங்கல் கொண்டாட்டம் பல்வேறு ஆடல், பாடல், மாற்றுத்திறனாள தனியார் டிவி புகழ் ஜோதி கலைச்செல்வியின் தனித்திறமை மற்றும் பாடல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளோடு ஆர்ஜே மாயா தொகுத்துவழங்க சிறப்பாக நடைபெற்றது. மேலும் டிக்டாக் பிரபலம் சமீக்ஷா சுஜீத்தின் நடனம், நடன அசைவுகளை அழகான வெளிப்பாடுகளுடன் அவரது நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது,
இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக தமிழ் நாட்டில் இருந்து நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவர் மனைவி ப்ரியங்கா, நடிகர் KPY பாலா, டிவி மற்றும் டிக்டாக் புகழ் சரவணன், பிரியா, மற்றும் அஸ்வின் ஆகியோர் கலந்துகொண்டனர் மேலும் சிறப்பு விருந்தினர்களாக, மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா ஆசாத், ரோமனா டாக்டர் மீனா, கேப்டன் தொலைக்காட்சி புதுவை ஸ்டார் முதன்மை வளைகுடா நெறியாளர் கமல் kvl ,ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், TEPA பால் பிரபாகர், சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் பகவதி ரவி, , A2B ராஜு, தினகுரல்
தமிழ் தேசிய நாளிதழின் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, பாளையங்கோட்டை ரமேஷ், எமிரேட்ஸ் நியான் உஸ்மான் அலி, எல்லா தமிழ் கூத்தாநல்லூர் ராப், தாஹிர், அரவிந்த் குரூப் பிரபகர், அமீரக தமிழ் பாடகி மிருதுளா, கள்ளக்குறிச்சி சின்னசாமி, தஞ்சை நசீர்,உள்ளிட்டோர் மேலும் பார்வையாளர்களாக டிக்டாக் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தமிழ் சங்கத்தின் டாக்டர் தலைவி ஷீலா நன்றி கூறி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் கொடுத்து மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக