தமிழகத்தில் புதிய தனிக்கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

தமிழகத்தில் புதிய தனிக்கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.

சென்னை, பிப்.02, தனிக்கட்சி தொடங்கினார் நடிகர் விஜய், பிரபல தமிழ் நடிகரான ஜோசப் விஜய் என்கிற விஜய் தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து தற்போது தனது கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார்.


கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கட்சியின் பெயர் "தமிழக வெற்றி கழகம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கட்சியின் ஆரம்ப கட்ட
பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது தமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும்,


வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் தம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


இறுதியாக, தன்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல என்றும் அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறதாகவும். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். 


அவர் சார்பில், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/