திருநெல்வேலி, பிப்.19, திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக, ரயில்வே போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
21ந் தேதி புதன்கிழமை,
திருநெல்வேலியிலிருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06673 ரயில். 11:40 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06679 ரயில் மற்றும் திருச்செந்தூரிலிருந்து மதியம் 2:30 மணிக்கு வாஞ்சிமணியாச்சி செல்லும் வண்டி எண் 06680 மாலை 6:15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06678 ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து.
திருச்செந்தூர்-பாலக்காடு இடையே செல்லும் வண்டி எண் 16731 & 16732 ஆகிய ரயில்கள் திருச்செந்தூர் - மணியாச்சி இடையே பகுதியாக ரத்து.
நாளை 20ந் தேதி செவ்வாய் கிழமை
திருநெல்வேலியிலிருந்து காலை 10:10 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06675 ரயில். 11:40 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06679 ரயில் மற்றும் திருச்செந்தூரிலிருந்து மாலை 6:15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06678 ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து.
திருச்செந்தூரில் இருந்து மதியம் 2:30 மணிக்கு வாஞ்சிமணியாச்சி செல்லும் வண்டி எண் 06680 ரயில் மற்றும் திருச்செந்தூர்-பாலக்காடு இடையே செல்லும் வண்டி எண் 16731 & 16732 ஆகிய ரயில்கள் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து.
22ந் தேதி வியாழக்கிழமை
திருநெல்வேலியிலிருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06673 ரயில். 11:40 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06679 ரயில் மற்றும் திருச்செந்தூரிலிருந்து மதியம் 2:30 மணிக்கு வாஞ்சிமணியாச்சி செல்லும் வண்டி எண் 06680 ரயில், மாலை 4:25 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06676 மற்றும் மாலை 6:15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06678 ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து.
திருச்செந்தூர்-பாலக்காடு இடையே செல்லும் வண்டி எண் 16731 & 16732 ஆகிய ரயில்கள் திருச்செந்தூர் - மணியாச்சி இடையே பகுதியாக ரத்து.
23ந் தேதி முதல் 26ந் தேதி வரை
திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே செந்தூர் அதிவிரைவு ரயிலைத் தவிர
அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக