தூத்துக்குடி - பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட எஸ் பி தலைமையில் காவலர் கொடி அணிவகுப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 மார்ச், 2024

தூத்துக்குடி - பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட எஸ் பி தலைமையில் காவலர் கொடி அணிவகுப்பு.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச்.19, தூத்துக்குடி தென்பாகம் மற்றும் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
  

வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு இன்று (19.03.2024) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு புறப்பட்டு காமராஜர் காய்கறி மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை, பழைய மாநகராட்சி அலுவலகம் வழியாக பழைய ஹார்பர் சந்திப்பு வரை வந்து நிறைவடைந்தது.


இதனையடுத்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் சந்திப்பு பகுதியில் இருந்து புறப்பட்டு பூபல்ராயர்புரம், கருப்பட்டி ஆபீஸ் சந்திப்பு, அமெரிக்கன் மருத்துவமனை, செல்வநாயகபுரம் சந்திப்பு வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து நிறைவடைந்தது.


இந்த கொடி அணிவகுப்பில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா, காவல் ஆய்வாளர்கள் வடபாகம் பிரேம் ஆனந்த், தெர்மல்நகர் ஷோபாஜென்சி, தூத்துக்குடி மத்தியபாகம் அலெக்ஸ்ராஜ் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை  பழனிச்சாமி, தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு பேச்சிமுத்து, மத்திய ஆயுதப்படை பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/